புதிய காளமேகத்தின் பொறிப்பேழை

toolbar powered by Conduit
உடனே பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

இணையத்தில் பணம் சம்பாதிக்க....

Wednesday, February 20, 2008

காலையுந்தான் போர்க்களமானதே!

விடிகாலை நான்கு மணி,அட நாய்கள் கூட விழிக்கவில்லை
வில்லங்கமாய் மனிதன் மட்டும் விழித்துவிட்டான்.
தாயார் தம்பிள்ளைகளை வசைபாடித் துயிலெழுப்ப - இது
தாங்காத தந்தைகள் தூக்கந்தொலைக்க - காபியென்ற
பெயரில் வெந்நீர் உதடுசேர - கடன்களை நாம் கழிக்க
உப்பிலா உணவும் வாய்க்கு ருசியாய் உள்ளே போக
ஸ்கூல் வண்டிக்காரனும் ஹார்னை அழுத்த - ஐயொவென
ஓடிப்போய் அதைப்பிடித்து பிள்ளை பள்ளி செல்ல
கணவரும், மனைவியுமாய் ஒற்றைக்காலே ஒருதரத்தில்
நிலம்பட ஓடியோடியே அலுவலகஞ்செல்ல
அப்பப்பா - காலையுந்தான் போர்க்களமானதே!

0 comments:

Creative Commons License
Tamil Poems by Puthiya Kalamegam is licensed under a Creative Commons Attribution-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at www.puthiya-kalamegam.blogspot.com.

உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்

இவ்வலைக்குடில் தொடர்பான தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாது எனக்கு அனுப்பி வையுங்கள். இது இவ்வலைக்குடிலை மேலும் மெருகேற்ற பேருதவியாக அமையும்.

தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.

nkashokbharan@lankamail.com

அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்