மனிதருக்கும் விலங்குக்கும் வேறுபாடு ஓரறிவாம்அந்த ஓரறிவு பகுத்தறியும் ஆறறிவாம் - நூறறிவு
வழங்கியும் என்பயன் இம்மூடர் - தம்மை தாமழிக்கும்
மதுவுக்கோர் முற்றுப்புள்ளி வைக்காக்கால்! - அட மதமெல்லாம்
ஒன்றிசைந்தே போதிக்கும் மது ஒழிப்பு - ஆயினும் இம்
மூடரெல்லாம் ஒருமித்தே விடம் பருகும் ஈனமேனோ?
நாமாருக்கும் குடியல்லோம் எனப்பறைபவர்களும் - மது
என்றால் மடைத்தனமாய் அலைவதேனோ? - வாழத்தந்த
வாழ்வை எல்லாம் மது பருகியே அழிப்பவர் ஈனரிலும் கடையரல்லோ?






0 comments:
Post a Comment