
அறிவிலோங்கி ஆணவம் மிகக்கொண்டு
அலைந்து திரியும் அறிவிலியே மனிதா....
அண்டம் முழுதும் ஆளும் ஆசையில் அண்டத்தை
ஆபத்தில் அண்டவைத்துவிட்டதுமேனோ?
பச்சை பச்சையாய் பசுமையாயிருந்த சுவர்க்க பூமியை
கரியமலமும் கடுஞ்சூடும் சூழ்ந்த சுடுகாடை ஆக்கியதேன்?
அன்புடன் கேட்கிறேன் - பண்புடைய மானிடா
உன் சந்ததியும் சாதிக்க வேண்டும் ஆகையில் இப்
பூமியும் வேண்டும், அதனால் காப்பீரே அதை
தணிப்பீரே பூமகளின் வெப்பத்தை - கொடூரத்தை !
மாறுபடுவீராயின் வீழ்வீர் பரம்பரையுடனே!






0 comments:
Post a Comment