பஞ்சமேயில்லை போலிகளுக்கு - எம் தேசமிதில்!
புழுப்பிடித்த அரிசியும் புழுத்துப்போன அரசியலும்
அலுத்துப்போய்விட்டது நம்மவருக்கு....
அரிஸ்டோட்டிலும், பிளேட்டோவும் முத்தெடுத்த
அரசியலை தத்தெடுத்த வீணரிவர் வீணாக்கினரே!
செம்மறிக்கூட்டமொன்றுமிப் போலிகளை நம்பி
செம்மையறியாது பின் செல்கின்றனவே!
அன்பிலும் போலி - இவர் பண்பிலும் போலி
யாதொன்றும் உண்மையாய்ச் செய்யாரே!
இவர் பேச்சுமோர்பொருட்டென சில மூடரும்
கைதட்டி மெய்சிலிர்த்து மகிழ்ந்தனரே!






0 comments:
Post a Comment