புதிய காளமேகத்தின் பொறிப்பேழை

toolbar powered by Conduit
உடனே பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

இணையத்தில் பணம் சம்பாதிக்க....

Thursday, February 28, 2008

கண்ணீரில் கரைகின்றேன்!



தமிழ்க் கதைகளை தமிழன் ஆர்வமுடன் படிக்க
நல்ல கதை தந்தவர் - விகடனில் நீவிர் எழுதிய
தொடரைப் படிக்கத் தவறியதுமில்லை - 21ம்
நூற்றாண்டு கண்ட அற்புத இலக்கியவாதிகளுளொருவரே!
தமிழிலும் அறிவியல் கண்டவரே சுஜாதா....!
உம்மையும் பறித்த காலனுக்குமோர் மனமுண்டோ!
உமது பிரிவினால் துயருறும் தமிழ் நெஞ்சங்களுடன் கூடி
நானுங் கண்ணீரில் கரைகின்றேன்!

Tuesday, February 26, 2008

இலவச தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுந்தகவல்

Call or Send SMS to any phone anywhere in the world Free! - CLICK HERE & GET THE CHANCE

இந்த இலவசச் சேவையைப் பெற இங்கே அழுத்தவும்.

Wednesday, February 20, 2008

காலையுந்தான் போர்க்களமானதே!

விடிகாலை நான்கு மணி,அட நாய்கள் கூட விழிக்கவில்லை
வில்லங்கமாய் மனிதன் மட்டும் விழித்துவிட்டான்.
தாயார் தம்பிள்ளைகளை வசைபாடித் துயிலெழுப்ப - இது
தாங்காத தந்தைகள் தூக்கந்தொலைக்க - காபியென்ற
பெயரில் வெந்நீர் உதடுசேர - கடன்களை நாம் கழிக்க
உப்பிலா உணவும் வாய்க்கு ருசியாய் உள்ளே போக
ஸ்கூல் வண்டிக்காரனும் ஹார்னை அழுத்த - ஐயொவென
ஓடிப்போய் அதைப்பிடித்து பிள்ளை பள்ளி செல்ல
கணவரும், மனைவியுமாய் ஒற்றைக்காலே ஒருதரத்தில்
நிலம்பட ஓடியோடியே அலுவலகஞ்செல்ல
அப்பப்பா - காலையுந்தான் போர்க்களமானதே!

Sunday, February 17, 2008

இசையின் பெயரால்...

பொப் இசை, ராக் இசை, ராப் இசை, ரெக்கே இசை - என
இசையின் பெயரால் வசை பாடும் நசைகளே!
இசையின் தசையாம் ஸ்ருதியும் லயமும் மறந்தோ
உங்களுக்கு - அட மூடா, இசையும் உனக்கொரு கேடோ?

இதுவும் புரிபவருக்கு புரியும்....

அண்ட் கம்பெனிகளின் கூடாரமிது - அன்பு
அழிந்த பாலையுமிது - வம்பு புரிபவர் அன்பர்
என ஆதரிக்கப்படும் 'நல்ல' தேசமும் இது!
ஐயோ இவரைபோல் இவர் தேசமும் போனதோ பாழாய்!

Wednesday, February 13, 2008

இனியாயினும் விழித்திடுங்கள்!

இன்பம் தேடி அலையும் வாழ்வு அன்றும் இன்றும் - ஆனால்
இன்பத்தை இன்பமாக அனுபவித்த காலம்போய்
ஒரு நாள் இன்பம் காண ஒரு ஆயுளையே பணயம்வைத்து
வீரவிளையாட்டில் வீணடிக்கும் வீணர்களே - இனியாயினும்
விழித்திடுங்கள்!

Monday, February 11, 2008

டியூஷன் மாஸ்டர்மாரே கேளுங்கள்...

எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்ற காலம் போய்
எழுத்தறிவிப்பவர்கள் பலருக்கு எமனாகும் காலமிதுவோ?
டியுடரி கிளாஸ் ஒரு பீஸ் பர்சனல் கிளாஸ் ஒரு பீஸ்
எனகல்விக்கு விலை பேசும் கனவான்களே - நீரும் வாழ்வீர்!

Sunday, February 10, 2008

இன்றைய மாணவர்களின் நிலை கண்டு.....

இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை
அதுபோல இன்றைய மாணவனும் அங்குமிங்குமாய்
அலைந்து உழன்று டியூஷன் போய் படிக்கிறான்
பாவம் அப்பன் - அவன் காசன்றோ கரைகிறது
இன்றைய மாணவன் மாட்டினும் கடையன்
அதுவாயினும் உண்டபின் அசை போடும்
எம் மாணவன் நுனிப்புல் மேய்ந்த மட்டுந்தான்!

Saturday, February 9, 2008

மனிதநேயம்

ஆசம் பாசம் இதெல்லாம் மோசம் என்பான்
நேசம் என்ற பண்பில்லாப் புலையன்
மனித வாசமே ஈதென்றறியா அம்மூடனை
மோசம் போகச்சொல்வதில் குற்றமேதுமில்லையே!

கற்பு

உட்பாவாடைகளே முழு ஆடையாக மாறிவிட்ட யுகந்தனிலே
கற்பிற்கும் ஆப்பு வைக்க புறப்பட்டு விட்டார்கள் நம்மிள
மங்கைகள் - பாவம், இது அவர்தவறில்லை - என்னிடம்
ஒன்றிருந்தால் தானே அதன் அவசியம் என்க்குப் புரியும்!

அழகிய தமிழ் மகன் பார்த்தேன்!

சைவக்கடையில் சாம்பார் செய்வதே ஒரு கலை!
பழைய மரக்கறிகள், கறிகள் யாவுக்கும் புத்துயிர்புகுத்தும்
பிரம்மாக்களின் கலையது! - ஆனால்உணவு பழசானாலும் - சமைத்தவிதம்
அதை புதுப்பிக்கும்!இதுவன்ன சாம்பார்தான் அழகிய தமிழ் மகன்
ஆனால்பாவம் அதைச்சுவைத்த பின் அழுகிறான் தமிழ் மகன்!

பிச்சையெடுக்காதீர்

யாசகமென்பது பெரும் இழிவு காலம்போய்
அதுவே நல்ல தொழில் என்ற காலம் பிறந்ததுபோல
வீதியோரமெல்லாம் கர்ணபிரபுக்களைத்தேடி யாசகர்கள்!
நோகாமல் நுங்கு பருகும் இதுவும் ஒரு தொழிலாம்!
முடியாதவன் யாசித்தால் அதுவவன் இயலாமை
முடிந்தவன் யாசித்தால் அதுவவன் சோம்பேறித்தனம்।
உடல்வலிமையிருந்துமுழைக்காத சோம்பேறிகளே
உங்களைவிட உடல் விற்றுப் பிழைப்போர் மேலடா!

Friday, February 8, 2008

அரசியல் வியா(வா)திகள்!

செய்வதோ வெட்டுக் குத்து, இல்லை காட்டுக் கத்து
இதுதான் இவர்களின் பித்து,சொல்வார்கள் பத்து
இவரிடம் சேர்கிறது சொத்து, இன்னும் எங்கள் வாழ்க்கையோ புத்து
அரசியல் என்ற முத்து, உங்களால் அழிந்ததன் சத்து!

செல்போன் சாதனையாளர்கள்

நோகியாவோடு பிறந்து,மோடரோலாவுடன் வளர்ந்து
சோனி எரிக்சனுடன் வாழ்ந்து, எல்।ஜியுடன் மடியும் வாழ்வடா!
சங்கத் தமிழர் படைத்த சாதனையெல்லாம் - இவர்கள்
மொபைல் பேசிப் பேசியே சாதிப்பார்களோ?

இது புரிபவருக்குப் புரியும்!

வீரமும் தீரமும் படைத்த குலமாம் - அவை
அரிக்கும் மானிடனுக்கும் பிறந்த பிறப்பாம்!
இருக்கட்டும் பரவாயில்லை - ஏனெனில்
குலப்பிறப்பில் துளியும் ஐயமி்ல்லை!
காலிலே முள் குத்திவிட்டதென தலைக்கு கவசம்
போடுமிவரை மூடரென நான் கூறவும் வேண்டுமோ?

தலைவர்களின் பாதுகாப்பைப் பார்த்தேன்

ஒருவன் போக - ஓராயிரம் பேர் புடைசூழ ஊர்வலமாம்
ஒரு குதிரைக்குப் பாதுகாப்பாய் பத்தாயிரம் கழுதைகளாம்!
பார் காக்கும் மன்னவனே பயந்து நடுங்கி ஒடுங்கிக் கிடந்தால்...
அவன் காக்கும் பாரோரை யார் காப்பான் - அட கடவு(ளா?)ளே

Thursday, February 7, 2008

பாதையோரத்தை அசிங்கப்படுத்தாதீர்கள்

நாய்க்கு இங்கைந்தறிவாம், அதுவோர் ஈனப்பிறவியென்பார்
பாதையோரத்தே மூத்திரமடிக்கும்போது - சாத்திரத்தையும்
கோத்திரத்தையும் மறப்பதேனோ? - நாமும் அதுவுஞ்செய்வது
ஒன்றானால்,நமக்கிடையே வேறுபாடென்றுமொன்றுண்டோ?
அதுவடித்தால் சாபமடா, நீயடித்தால் விமோசனமோ?
இங்கு மூத்திரமும் பிழையில்லை - சாத்திரமும் பிழையில்லை
உன் வாழ்வெனும் கதையி்ல் உன் பாத்திரமே பிழை!

பழனி படம் பார்த்த பின்னர்

ஞானப்பழம் வேண்டி மலையேறினான் அந்தப் பழனியாண்டி - அட
இந்த ஞானசூனியங்களோ சினிமாவெனும் விளக்கை கமர்ஷியலெனும்
துணியாலணைக்கின்றன - பஞ்சாமிர்தமென சாக்கடைச்சேற்றுக்கு மைவண்ணம்
அப்பி - மூடருக்குப் பிரசாதமெனத் தருகிறான் (மா“மா)மன்னன்”!

காளை படம் பார்த்த பின்னர்

தன்னை லிட்டில் லிட்டிலென்பான் - அவனறிவும் லிட்டில்தானோ?
கட்டிலும் காமமுமில்லாப்படமவன் சரிதையிலுண்டெனக்
காட்டவோர் படமெடுக்கவே - காட்டினான் ஒரு எருமையின் “கதை”
ஐயோ! அக்கதையில் உண்டோ ஏதும் கதை?

இலங்கையின் இன்றைய நிலை

பள்ளிகளிலே குண்டுபோட்டுவிடுவானென்று பயந்துநடுங்கியே
இங்கு சில மூடரும் பள்ளிகளை மூடிவிட்டனர்!(?)
சளி பிடித்ததால் மூக்கையே வெட்டிவிடும் மூடரும்
இப்புவியிலுள்ளனரென்பது உண்மையன்றோ?...(நானறியேன்)

Wednesday, February 6, 2008

நடிகர்களும் தமிழினமும்

சூப்பரென்பார், சுப்ரீமென்பார், அல்டிமேடென்பார்
இளையதென்பார், புரட்சியென்பார், லிட்டிலுமென்பார்
இவர்தான் எந்தெய்வமுமென்பார் - கூத்தாடுவதும்
குண்டிநெழிப்பதும் ஆத்தாதான் செயலென்று அறியாமூடர்!

தொலைக்காட்சியும் எம் சமூகமும்

சன், விஜய், கலைஞர், மக்கள் என ஸ்தோத்திமோதுவர்
இவையெல்லாந் தெய்வமென்பர் - தருமருள்
நெடுந்தொடரென்பார், அதனாற்றமக்கு முத்தி என்பர்
வேறுசோலியற்றுக் கிடக்கும் நரகத்தின் அம்சமன்னார்!

நடிகைகளும் எம் சமூகமும்

அந்நிய அழகிகளால் தலைவணங்கிச் சீரழியும் புலையரே!
அவர்க்கு கோயிலுங்கட்டி, தோத்திரமுங்கூறும் ஈனரே!
தன்னுடல்விற்று வயிறு பிழைக்கும்
பரத்தையருமுமக்குத் தெய்வங்களோ?

ஆங்கில மோகம்

அம்மாவை மம்மியென்றும் அப்பாவை
டாடியென்றும் கூறிக் கெடுத்த என்சமூகம்
சும்மாவோர் ஓரத்திற் சுருண்டு கிடந்த
நாயைப் பப்பி, பப்பி என்றதாம்!

இன்றைய இளையோர் நிலை

காதலுஞ் செய்து,கிரிக்கட் மோகமும் கொண்டு
கல்வியைக் கோட்டைவிடும் கோணங்கிகளே!
சினிமாவுக்கு காதல் பணம்!, வீரனுக்கு கிரிக்கட் பணம்!
அட மூடா படித்தால் தான் உனக்குப் பணம்!

தமிழின் சாபக்கேடு

தமிழைத் தமிலென்றும் டமிலென்றும்
உளறித் தள்ளும் உதவாக்கரையே!
உன் தாயையுங் கூட நாளை
அம்மாவிற்குப் பதில் சும்மா என்பாயோ?
Creative Commons License
Tamil Poems by Puthiya Kalamegam is licensed under a Creative Commons Attribution-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at www.puthiya-kalamegam.blogspot.com.

உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்

இவ்வலைக்குடில் தொடர்பான தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாது எனக்கு அனுப்பி வையுங்கள். இது இவ்வலைக்குடிலை மேலும் மெருகேற்ற பேருதவியாக அமையும்.

தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.

nkashokbharan@lankamail.com

அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்