உயிர் தந்த இறைவனொப்ப உயிர் காக்கும்கலைஞனாம் - அட இவனும் மனித வடிவிலுதித்த
கடவுளாம்! - அப்பாவியர் உம்மில் இறைவனை பார்ப்பினும்
அட பக்தனாய் பார்க்காவிடினும் ஒரு உயிரென ஆயினும்
ஈவிரக்கம் கொண்டு காப்பீரே - பிணமும் வாய்திறக்கும்
பணத்தை கறக்கவே பல பிணங்களை தந்ததுமேன்?
முழு முதல்வன் ஒப்ப திறன் படைத்த நீரே... மன்னுயிரை
காத்திடுவீரே - மாறியற்ப பணப்பித்துக்கொண்டு அலைவீராயின்
ஐய நீவிர் புலையனிலும் கடையனாவீர் - மனதிற் கொள்க!











