
குடைகளுக்குள்ளே குட்டிக் குட்டி ராஜ்ஜியங்கள்
நடத்துகிறார்கள் - நவீன யுகக் காதலர்கள்!
கடற்கரையின் கற்புளுதிகளுக்குள் கலாசாரத்தின்
உயர்ச்சிகள் உயிரற்ற ஜடமாய் புதைந்து போயினவே!
காலம் மாற கலாசாரமும் மாறவேண்டும் என
மாற்றம் பேசும் உள்ளங்களே... ஐநூராண்டு முன்
பிறந்த கத்துக்குட்டிகளின் மிருக கலாசாரத்துள்
ஆயிரமாண்டு பழமைபெற்ற எம் கலாசாரங்கள்
கலந்து கலவையாகி அழிந்து போவதோ?
தாரத்திற்காய் தாயை விற்கும் ஈனக்கூட்டம்
நாங்கள் என்றால் - அட போடா மடையா அது நாமல்லநீயே
தாயும் வேணும் தாரமும் வேணும் - ஆனால்
தாரத்திற்காய் தாயை தூக்கி எறியக்கூடாது....
தாரம் அழகு தான், ஆசையும் எமக்கு அவள்மேல்
கூடத்தான்.... ஆயினும் தாயின்றி நீயுமுண்டோ?






