புதிய காளமேகத்தின் பொறிப்பேழை

toolbar powered by Conduit
உடனே பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

இணையத்தில் பணம் சம்பாதிக்க....

Thursday, May 15, 2008

குடைகளுக்குள்ளே...




குடைகளுக்குள்ளே குட்டிக் குட்டி ராஜ்ஜியங்கள்
நடத்துகிறார்கள் - நவீன யுகக் காதலர்கள்!
கடற்கரையின் கற்புளுதிகளுக்குள் கலாசாரத்தின்
உயர்ச்சிகள் உயிரற்ற ஜடமாய் புதைந்து போயினவே!


காலம் மாற கலாசாரமும் மாறவேண்டும் என
மாற்றம் பேசும் உள்ளங்களே... ஐநூராண்டு முன்
பிறந்த கத்துக்குட்டிகளின் மிருக கலாசாரத்துள்
ஆயிரமாண்டு பழமைபெற்ற எம் கலாசாரங்கள்
கலந்து கலவையாகி அழிந்து போவதோ?


தாரத்திற்காய் தாயை விற்கும் ஈனக்கூட்டம்
நாங்கள் என்றால் - அட போடா மடையா அது நாமல்லநீயே
தாயும் வேணும் தாரமும் வேணும் - ஆனால்
தாரத்திற்காய் தாயை தூக்கி எறியக்கூடாது....
தாரம் அழகு தான், ஆசையும் எமக்கு அவள்மேல்
கூடத்தான்.... ஆயினும் தாயின்றி நீயுமுண்டோ?

Tuesday, May 6, 2008

இலக்கியம் படைக்கும் மாமேதைகள்....


சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த இப்பாரதனில்
இன்று இலக்கியம் படைக்கும் மாமேதைகள்....
உண்மை மேதைகளுக்கு விலக்குண்டாயினும்
பொய்மைப் புகழ் விரும்பிகளும் இலக்கியவாதிகளாய்
இனங்காட்டும் ஈனம் அவர்க்கு மட்டுமல்ல தமிழுக்கும்
இழிவாமே ஏனறியார் இம்மூடர்....


இலக்கணமும் இறந்தாச்சு - சங்க
இலக்கியமும் மறந்தாச்சு - அற்பப்
புகழ் விரும்பும் பேய்களின் கையில்
தமிழ் மணமும் நாறிப்போயாச்சு....


அர்த்தமில்லா கதைகளெல்லாம்
காவியமென போற்றப்படுதலாச்சு
கேடுகெட்ட வசனமெல்லாம்
கவிதை என புகழும் பெற்றாச்சு....


கட்டுக்கட்டாய் புத்தகங்கள் - குறை விலையில்
அச்சுப் பதிச்சாச்சு... - வேலையற்ற மாக்களுடன் கூடி
வெளியீட்டு விழாவும் நடத்தியாச்சு....

சங்கமாவது கிங்கமாவது - யார் எமைக்கேட்பார் ?
காசிருந்தால் கண்டதும் எழுதும் 'பண்டிதரும்'
இனி இலக்கிய மேதை தான்!

Creative Commons License
Tamil Poems by Puthiya Kalamegam is licensed under a Creative Commons Attribution-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at www.puthiya-kalamegam.blogspot.com.

உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்

இவ்வலைக்குடில் தொடர்பான தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாது எனக்கு அனுப்பி வையுங்கள். இது இவ்வலைக்குடிலை மேலும் மெருகேற்ற பேருதவியாக அமையும்.

தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.

nkashokbharan@lankamail.com

அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்